Friday, April 27, 2007

பாவை வியப்பேன்

பாவை வியப்பேன்

பாவில்வாழ் குடிபிறந்தேன்
பாவால்வந்த பைங்கூழால்
மெய் வளர்த்தேன்
அப்பாவால் தமி்ழ்பயின்றேன்

அப்பாவை மதித்திருந்தும்
பலபாவை தோய்ந்திருந்தும்
சிலபாவை நெய்திருந்தும்
பைங்கூழும் சுவைக்கவில்லை
பைந்தமிழும் சுவைக்கவில்லை

பலபாவை எழில்மகிழ்ந்தேன்
ஒருபாவை பின்மணந்தேன்
அப்பாவை என்பாவை
இன்பாவை எனப்பிழைத்தேன்

பலபாவை உளம்மகிழ்ந்தேன்
சிலபாவை உணர்ந்தாய்ந்தேன்
நற்பாவை தரும்பைந்தமிழில்
பெருகிவரும் செந்தேனில்
கசியும்மனம் உருகிநின்று
தமிழ்ப்பாவை வியப்பதனால்
இப்பாவை செயவிழைந்தேன்

No comments: