Tuesday, April 17, 2007

அறிமுகம் - வலைப்பதிவில் என்பதிவேன்?

அறிமுகம் - வலைப்பதிவில் என்பதிவேன்?

தமிழ்க் கவிதைகள், கருத்துகள் சிலவற்றைப் படிக்கும்போதும், கேட்கும்போதும், அதன் கருத்துச்சிறப்பில், வடிவழகில், அவை நினைவுப் படுத்தும் பழந்தமிழ்க் குறிப்புகளால், அளவில்லா மகிழ்ச்சியும், வியப்பும் என் மனதில் தோன்றுகின்றன. மிகக் குறைந்த் தமிழறிவும், திறனும் கொண்ட என்மீதே இவ்வளவு தாக்கம் ஏற்படுத்துகின்றன எனறால், அநத்க் கவிதைகளின், அவற்றை ஆக்கியவர்களின் திறனை, ஆழத்தை என்னென்று சொல்ல? அவ்வாறு தோன்றும் என் எண்ணங்களைப் பதிவு செய்யவும், பகிர்ந்து மகிழவும் விரும்புகின்றேன். அதனால் இந்த சிறு முயற்சி.

சில ஒப்புதல்கள், முன்குறிப்புகள்:
என் திறன்குறைவால், நான் பல உண்மைகளை, கருத்துகளைத் தவறாகவோ, குறைவாகவோ புரிந்து கொண்டு தவறான எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடும். என் எண்ணங்களும், கருத்துகளும் தவறான அடிப்படையிலும், கற்பனையினாலும் தோன்றக் கூடும். எனக்குச் சிறப்பாகத் தோன்றும் கவிதைகளும், கருத்துகளும், மற்றவர்களுக்கு சிறப்பற்றதாகத் தோன்றலாம். "*நான் கவிஞ்சனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை, தமிழில் வல்ல அறிஞ்சனுமில்லை"


*நன்றி: கவிஞர் கண்ணதாசன்

No comments: