Saturday, April 14, 2007

முதல் குறள், முதல் குரல்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

-திருக்குறள்


இன்று தமிழ்ப் புத்தாண்டு - ஏப்ரல் 14, 2007

அறத்தின்பால் மனம்சேர்க்கும்
பொருளின்பால் நிலம்சேர்க்கும்
அன்பின்பால் மெய்சேர்க்கும்
மெய்யான மறையிதுவே
என்றென்றும் நல்லறிஞ்சர்
நன்றென்றே நவில்கின்ற
திருக்குறளின் முதல்குறளே
வலையினிலென் முதல்குரலாய்
தமிழளித்தோர் தாள்வணங்கி
தமிழ்வாழ்த்தி உமைவாழ்த்தி
தமிழ்மகிழ நுழைகின்றேன்
உடன்மகிழ அழைக்கின்றேன்.

1 comment:

Anonymous said...

Impressively assembled words of Tamil(my mother tongue) which very aptly captures the writer's longing, belonginh to our ancient, scholarly world !!!